/* */

குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைப்பணி மேற்கொள்ள கோரிக்கை

செந்தலைப்பட்டினத்தில் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைப்பணிகளை மேற்கொள்ள பேராவூரணி எம்எல்ஏ.விடம் கோரிக்கை

HIGHLIGHTS

குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைப்பணி மேற்கொள்ள கோரிக்கை
X

பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமாரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலாபுதீன் தலைமையில், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சந்தித்தனர்

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலாபுதீன் தலைமையில், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

அப்போது, பேராவூரணி அருகிலுள்ள துறவிக்காடு ஜமாத்துக்கு சொந்தமான மையவாடிக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால், சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும். அங்குள்ள தர்கா செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் இருப்பதால், புதிதாக தார்சாலை அமைத்து தர வேண்டும்.

அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் செந்தலைப்பட்டினத்தில், மத்திய அரசு வனத்துறை மூலம் துறைமுகம் வரை சாலை அமைக்கும் திட்டம் கருத்துருவில் உள்ளது. இத்திட்டம் அமையப்பெற்றால் பல வருடங்களாக குடியிருந்து வருபவர்களின் வீடுகள் இடிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, குடியிருப்பவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Updated On: 26 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்