Begin typing your search above and press return to search.
வெப்பம் தணித்த கோடை மழை
விவசாயிகள் மகிழ்ச்சி
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காலை முதல் மேகம் இருண்டு காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து திடீரென பலத்த காற்று வீசியது. பின்பு இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் தற்போது கோடை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.