/* */

காண்டாமிருக வண்டு,கரையானை எப்படி ஒழிக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க..!

காண்டாமிருக வண்டு,கரையானை கூண்டோடு அழிக்க மெட்டாரைசியம் பச்சை பூஞ்சாளம் பயன்படுத்தவேண்டும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

காண்டாமிருக வண்டு,கரையானை எப்படி ஒழிக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
X

ஆலத்தூர் விவசாயி தங்கராசுக்கு  200 கிலோ மெட்டாரைசியத்தினை ஆலத்தூர் வேளாண்மை உதவி அலுவலர் ராமு வழங்கினார்.

மதுக்கூர் வட்டாரத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டுகள் மற்றும் தென்னை தாக்கும் வண்டுகளை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதற்கு மெட்டாரைசியம் எதிர் உயிரி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகளை அழிப்பதில் அதன் இளம் புழுக்களை மற்றும் அனைத்து கடித்து உண்ணும் பயிர்களை குடையும் புழுக்களை கட்டுப்படுத்துவதில் மெட்டாரைசியம் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு எக்டருக்கு நாலு கிலோ மெட்டாரைசியம் பரிந்துரை செய்யப்படுகிறது. ஒரு கிலோ விலை ரூபாய் 135.

பொதுவாக விவசாயிகள் வண்டுகள் மற்றும் பயிர்களை குடையும் புழுக்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கெடுவதோடு நமது உண்ணும் உணவிற்கே மீண்டும் அவைகள் மீள வந்து சேர்கின்றது.

இதற்காக நமக்கு கிடைத்த பச்சை பொக்கிஷம் தான் மெட்டாரைசியம். இதை நீருடன் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க முடியும் அல்லது மக்கிய குப்பையுடன் கலந்து பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விடலாம். காண்டாமிருக வண்டு. தனது முட்டை மற்றும் புழுக்களை தென்னந்தோப்புகளில் அல்லது பசுஞ்சாணங்களை விவசாயிகள் கொட்டி வைத்திருக்கும் இடங்களில் சென்று இடும்.

மேலாக அரை அடி ஆழத்தில் மட்டும் இவைகள் காணப்படும். குப்பை அதிகம் உள்ள இடங்களில் காண்டாமிருக தாக்குதல் உள்ள தென்னங்கன்றுகளுக்கு அருகிலும் ஒரு ஏக்கருக்கு தேவையான 1.5 கிலோ மெட்டாரைசியத்தை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தளிப்பானில் ஒரு லிட்டர் கரைசல் மற்றும் 9 லிட்டர் தண்ணீர் கலந்து அடிக்கலாம்.

மேலாக உள்ள வடிகட்டிய கரைசலை மட்டும் அடிக்கவும் கீழே தங்கி இருக்கும் வெள்ளை பொடியானது கைத்தெளிப்பான்களின் நாசிலை அடைத்துக் கொள்ளும். எனவே கவனம் தேவை. மாவுக்கு ஏழு டாங்க் ஏக்கருக்கு 21 டேங்க் விதம் அடிக்கவும். இதையே பாதிக்கப்பட்ட மரங்களில் காண்டாமிருகம் ட்ரு தாக்குதலை தடுக்க தேவையான ஒன்றரை கிலோ மெட்டாரைசியத்தினை 50 -60 கிலோ மத்திய குப்பையுடன் கலந்து மரத்துக்கு அருகில் மரத்துக்கு ஒரு கிலோ வீதம் வைக்கலாம்.

கரையான் புற்று அதிக தொல்லை தரும் இடங்களில் கரையான் புற்றுகளில் இந்த பச்சை பூஞ்சளத்தை மக்கிய குப்பை அல்லது நீர் அல்லது பேப்பர் பொட்டலமாக கட்டி கரையான் காலனியில் போட வேண்டும். பாதிப்புக்கு தக்க ஒரு லிட்டர் வரை ஊற்றிவிடலாம்.

மூன்று நாட்களுக்குள் இந்த பூஞ்சாளம் காண்டாமிருகபுழு மற்றும் பூச்சி உடல் முழுவதும் போர்வை போல சுற்றிக் கொள்ளும். பூச்சி வண்டு மற்றும் இளம் புழுக்கள் இறந்து விடும். இந்த பூச்சியின் மீது படும் பிற பூச்சிகளும் மெட்டாரைசியத்தினால் பாதிக்கப்பட்டு இறந்துவிடும்.

கரையான் காலனிகளில் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளதால் மிக விரைவாக இந்த பூஞ்சை பரவி முழு காலனியும் அழிக்கப்படுகிறது. கரையான் புற்றுகளில் மக்கிய குப்பையுடன் கலந்து போடுவதை விட கார்டு போர்டு பழைய பேப்பர்கள் கலவையுடன் சேர்ந்து இடும் பொழுது கரையான்கள் விரைவாக இதன் மூலம் கவரப்பட்டு விரைவில் கொல்லப்படுகின்றன.

எனவே விவசாயிகள் மதுக்கூர் வேளாண் விரிவாக்கம் மையத்தின் மூலம் வழங்கப்படும் மெட்டாரைசியத்தினை பெற்று இயற்கை முறையில் கட்டுப்படுத்தவேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

ஆலத்தூர் தங்கராசு,சிலம்பவேளங்காடு கவிராசன்,சேகர் மற்றும் அத்திவெட்டி ராஜகிருஷ்ணன் உள்ளிட்ட விவசாயிகள் இன்று வேளாண் விரிவாக்க மையத்தில் பெற்று கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு,ராமு மற்றும் சுரேஷ் செய்து இருந்தனர்.

Updated On: 26 March 2024 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...