/* */

பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் நகை திருட்டு: போலீஸ் விசாரணை

முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் நகை திருட்டு

HIGHLIGHTS

பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் நகை திருட்டு: போலீஸ் விசாரணை
X

திருடு நடந்த முன்னாள் எம்எல்ஏ மகன் வீடு

பாபநாசம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பெருமாங்குடியை சேர்ந்த வெங்கடாஜலம் நாட்டார். இவருடைய மகன் நடராஜன் (63) ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர். இவருக்கு பாபநாசம் அருகே பெருங்குடி, குடியான தெருவில் வீடு உள்ளது.

இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று அங்குள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாங்குடியில் உள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்து நடராஜன் பார்க்கும் பொழுது வீட்டினுள்ளே சாமி அறையில் வைத்திருந்த குலதெய்வ நகை, காசு மாலை, 3 பவுன் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதனுடைய மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும். இது குறித்து அவர் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 2 Feb 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!