/* */

கொரோனாவிற்கு மனைவி பலி, கணவனும், மகனும் தற்கொலை

தஞ்சை அருகே மனைவி கொரோனாவால் இறந்த துயரத்தில் இருந்த கணவன், மகன் ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

HIGHLIGHTS

கொரோனாவிற்கு மனைவி பலி,  கணவனும், மகனும்  தற்கொலை
X

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன் (57). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் தனது மனைவி மீனா(45) மற்றும் மகன் மனோஜ்குமார் (26) ஆகியோருடன் கிருஷ்ணகிரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மீனாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனா இறந்தார்.

இதைதொடர்ந்து அங்கேயே கொரோனா விதிமுறைப்படி மீனாவுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இந்நிலையில் மீனாவின் அஸ்தியை தனது மாமனார் வீடான தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்தில் கரைக்க கனகராஜன் முடிவு செய்தார்.

அதன்படி தனது மகன் மனோஜ்குமாருடன் நரங்கிப்பட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் மீனாவின் அஸ்தி கரைக்கப்பட்டது.

இதற்கிடையே மீனாவின் மறைவால் கனகராஜன் கடந்த ஒரு மாதமாகவே மிகுந்த மனவேதனையில் காணப்பட்டார். யாரிடனும் சரிவர பேசாமல் விரக்தியில் இருந்துள்ளார் இதேபோல் மனோஜ்குமாரும் தாயின் பிரிவால் துயரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் மனவேதனையில் இருந்த இருவரும்

நேற்று இரவு கனகராஜனும், மனோஜ்குமாரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கனகராஜன், மனோஜ்குமார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொரோனாவுக்கு மனைவி இறந்த சோகத்தில் கணவன், மகன் தற்கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Updated On: 20 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!