/* */

தஞ்சை:மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 3 பதவி இடங்களிலும் தி.மு.க. வெற்றி

தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் உள்பட 3 பதவி இடங்களிலும் வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

தஞ்சை:மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட  3 பதவி இடங்களிலும் தி.மு.க. வெற்றி
X

தஞ்சை மாவட்டத்தில் மூன்று பதவி இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் பழனிமாணிக்கம் எம்.பி. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வுடன் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 2 ஒன்றிய கவுன்சிலர் உள்பட 22 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அம்மாபேட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் ராதிகா கோபிநாத் 8,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைப்போல் கும்பகோணம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சசிகுமார் 189 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றிச்செல்வி 1,203 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தஞ்சை மாவட்ட இடைத்தேர்தலில் மூன்று பதவி இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி வெற்றி பெற்றது. அ.தி.மு.க, அ.மு.மு.க. படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தி.மு.க வெற்றியை அடுத்து ஒரத்தநாடு அண்ணா சிலைக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 12 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்