Begin typing your search above and press return to search.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 7,99,124 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 59,370 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 54,121 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 4,596 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 5341 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 569 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.