/* */

கும்பகோணம் அருகே மின்கம்பத்தில் மோதி சிறுவன் உயிரிழப்பு

வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவன் மின்கம்பம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே மின்கம்பத்தில் மோதி சிறுவன் உயிரிழப்பு
X

விபத்தில் பலியான சிறுவன் பாலாஜி.

கும்பகோணம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது ஒரே மகன் பாலாஜி( 17). இவர் தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள சோலையப்பன் தெருவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அந்தப் பகுதியில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது பாலாஜி ஓட்டி வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மின் கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 26 July 2021 2:14 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...