/* */

மரக்கடைக்கு தீ வைப்பு: கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் மறியல்

புளியங்குடியில், மரக்கடைக்கு தீ வைத்தவர்களை கைது செய்யக்கோரி, இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மரக்கடைக்கு தீ வைப்பு: கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் மறியல்
X

மரக்கடைக்கு தீ வைத்த நபர்களை கைது செய்யக்கோரி, புளியங்குடியில் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி சேர்ந்த இந்து முன்னணி நகர தலைவர் சரவணன். இவருக்கு சொந்தமான மரக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து தப்பியோடினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச் சாமான்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனர்.

மரக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதால், உடனடியாக மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர், புளியங்குடியில் ராஜபாளையம் - தென்காசி செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த, தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 27 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்