Begin typing your search above and press return to search.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தென்காசி மாவட்டத்தில் நாளை விடுமுறை
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19.02.2022 அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்தல் நடைபெறும் நாளில் சம்மந்தப்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையாெட்டி மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
மேலும் அன்றைய தினம் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் எனவும், விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ அல்லது சம்பள குறைப்போ செய்யக்கூடாது. இந்த உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.