நரிக்குறவர்களுக்கு போர்வை, துண்டு வழங்கிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர்
Udayanithi Stalin Charitable Trust donated the Narikkuravas blanket and piece
HIGHLIGHTS
பேருந்து நிலையத்தில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு போர்வை மற்றும் துண்டு வழங்கிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் குடியிருக்கும் நரிக்குறவர் சமுதாயத்தின் நாட்டாமையின் கோரிக்கையை ஏற்று உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட தலைமையின் சார்பாக நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு போர்வை மற்றும் துண்டுகள் 80 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிதர்மம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன் செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை, மாவட்ட துணைச் செயலாளர் அருணன், காசிதர்மம் துரை, செண்பகநல்லூர் கண்ணன், பெட்டி முருகையா மற்றும் மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை தென்காசி ஒன்றிய தலைவர் வசந்தகுமார் மற்றும் மன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.