தென்காசியில் தமுமுக வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல்
தென்காசி நகராட்சியில் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் நகராட்சி உறுப்பினர்.
HIGHLIGHTS
வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் நகராட்சி உறுப்பினர்.
தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளும், வாய்ப்பு கிடைக்காத பலர் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி நகராட்சியில் தமுமுக மாவட்ட தலைவரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான சலீம் 10வது வார்டு பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சைக்கிளில் வந்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரித்து வருவதால் மத்திய அரசு அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று சைக்கிளில் வந்து மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
மேலும் 11வது வார்டு பகுதியில் அவரது மனைவி அனிஷ் போட்டியிடுகிறார். அவரும் மனு தாக்கல் செய்தார். இதேபோல் மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் 20-வார்டு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.