சுரண்டையில் மாவட்ட மஸ்தூர் பணியாளர்கள் கூட்டம்!
சுரண்டையில் மாவட்ட மஸ்தூர் பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட மஸ்தூா் பணியாளா்கள் பேரவை கூட்டம் சுரண்டையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட மஸ்தூா் பணியாளா்கள் பேரவை கூட்டம் சுரண்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளா் வேல்மயில் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் அந்தோணி நிஷா முன்னிலை வகித்தாா்.
பொது சுகாதாரத்துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் கங்காதரன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில், டெங்கு தடுப்பு மஸ்தூா் பணி மேற்கொள்ளும் கிராம ஊராட்சி பணியாளா்களுக்கு ரூ.519-ம், பேரூராட்சி மற்றும் அதற்கு மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் மஸ்தூா் பணியாளா்களுக்கு ரூ.220 தினக்கூலியாக வழங்குவதை மாற்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க அரசை கோருவது, டெங்கு மஸ்தூா் பணியாளா்களுக்கு பணி உத்தரவாதம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மஸ்தூர் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பேரவை நிா்வாகிகள் முருகையன், மகாலெட்சுமி, வனஜா, திருமலைச்செல்வி, தங்கரதி, ராஜ், சின்னத்தாய், மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.