/* */

சுரண்டையில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு

சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

சுரண்டையில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு
X

சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டையில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சுரண்டை 27 வார்டுகள் கொண்ட புதிய நகராட்சி பகுதி. இங்குள்ள 27 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தனித்து போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் சுரண்டை நகராட்சி பகுதிகளில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட வருகை தந்த அவருக்கு தென்காசி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தின் போது சுரண்டை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வள்ளி முருகன், உட்பட மற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு விஜய் வசந்த் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 16 Feb 2022 1:58 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு