Begin typing your search above and press return to search.
உரிய அனுமதியின்றி கற்களை திருடிய நபர் கைது
தென்காசி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி கற்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல பாட்டாகுறிச்சியில் போலீசார், ரோந்து பணியில் இருந்த போது அங்கு சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் டிராக்டரில் கற்களை திருட முயன்ற சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (23) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து டிராக்டர் வாகனம் மற்றும் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.