Begin typing your search above and press return to search.
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசியில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களைச் சார்ந்தோர்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21-09 2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.
எனவே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்கள்/ அவரைச் சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்படும், இச்சிறப்பு முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ்,கேட்டுக் கொண்டுள்ளார்.