/* */

போதை பொருட்களை ஒழிக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை - தென்காசி மாவட்ட எஸ்பி சாம்சன் உறுதி

தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என, புதிதாக பொறுப்பேற்ற தென்காசி மாவட்ட எஸ்பி சாம்சன் கூறினார்.

HIGHLIGHTS

போதை பொருட்களை  ஒழிக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை  - தென்காசி மாவட்ட எஸ்பி சாம்சன் உறுதி
X

புதிதாக பொறுப்பேற்ற தென்காசி மாவட்ட போலீஸ் எஸ்.பி  சாம்சன்.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து, தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3-வது எஸ்பியாக சாம்சன், நியமனம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட சாம்சன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி சாம்சன் கூறியதாவது;

தென்காசி மாவட்டத்தில் தற்போது வரை சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்படும். அதேபோல், காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறித்து உடனே நடவடிக்கை எடுத்து அதற்கு உடனடி தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாவட்டத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுப்பவர்களின் ரகசியங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 13 Jan 2023 8:21 AM GMT

Related News