/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல்
X

தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 1884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்கான பெட்டியில் வைத்து பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குபதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பாதுகாப்பு அறையில் வாக்கு இயந்திரங்கள் தொகுதி வாரியாக வைக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சமீரன் தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, துணை ராணுவவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

Updated On: 7 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!