Begin typing your search above and press return to search.
விவேக் மறைவிற்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி
திரைப்பட நடிகர் விவேக் மறைவிற்கு விவசாய சங்கம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் விவசாய சங்கமும் இணைந்து மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர். ஆலடிப்பட்டி குளத்தின் கரையில் விவேக்கின் 59 வயதினை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந் நிகழ்ச்சியினை தென்காசி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் பழனி நாடார் மரங்களை நட்டு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் விவசாய சங்கத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.