Begin typing your search above and press return to search.
ஆயிரபேரியில் ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ பழனி நாடார்
ஆயிரபேரியில், 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை, தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் ஆயிரபேரியில், ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடையை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வை தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் தென்காசி தொகுதி தலைவர் சந்தோஷ், உட்பட கட்சி நிர்வாகிகளும் கிராம மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.