தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே மேலாளர் ஆய்வு
தென்காசி ரயில் நிலையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே பகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 93 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ள சூழலில், இந்தத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி ரயில் நிலையத்திற்கு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ள நிலையில், தென்காசி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து இன்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீ வஸ்தவா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தென்காசி ரயில் நிலையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகளான மல்டி லெவல் பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா பொருத்துதல், இயற்கைத் தோட்டம் அமைத்தல், நடை மேம்பாலம், மின் தூக்கி, நகரம் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, அங்கிருந்து ரயில் மூலமாக புனலூர் புறப்பட்டு சென்ற மதுரை கோட்ட மேலாளர், புனலூர் ரயில் நிலையத்தையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.