/* */

தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே மேலாளர் ஆய்வு

தென்காசி ரயில் நிலையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே மேலாளர் ஆய்வு
X

 தென்காசி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த ரயில்வே பொது மேலாளர்.

அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே பகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 93 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ள சூழலில், இந்தத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி ரயில் நிலையத்திற்கு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ள நிலையில், தென்காசி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து இன்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீ வஸ்தவா ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தென்காசி ரயில் நிலையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகளான மல்டி லெவல் பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா பொருத்துதல், இயற்கைத் தோட்டம் அமைத்தல், நடை மேம்பாலம், மின் தூக்கி, நகரம் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, அங்கிருந்து ரயில் மூலமாக புனலூர் புறப்பட்டு சென்ற மதுரை கோட்ட மேலாளர், புனலூர் ரயில் நிலையத்தையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Oct 2023 5:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்