/* */

23 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

23 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து பணியாளர்களுக்கும் புதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சித்திரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காலதாமதம் இன்றி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும், தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும், பதவி உயர்வில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், ஓய்வு பெற்ற செயலாளர்களுக்கு நிதி பயன்கள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் கூட்டுறவுத் துறையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் வருகின்ற 25ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 March 2024 12:24 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  2. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  3. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  6. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  7. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  8. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  9. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  10. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...