தென்காசி குழந்தைகள் தின விழாவில் பழனி நாடார் எம். எல்.ஏ.பங்கேற்பு
Children's Day Celebration in Tenkasi -தென்காசியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பழனி நாடார் எம். எல்.ஏ.பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.
HIGHLIGHTS
Children's Day Celebration in Tenkasi -சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் நவீன இந்தியாவின் சிற்பி என போற்றப்படுபவர் மறைந்த பண்டித ஜவகர்லால் நேரு. ஜவர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அதனால் அவர் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் நவம்பர் 14ம் தேதியான நேற்று முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பிலும் தமிழகம் முழுவதும் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தின விழா நடந்தது. விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி. ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பால் எ. சண்முகவேல், எம்.ஏ. துரை, கவுன்சிலர்கள் அருணகிரி சந்திரன், வெயிலுமுத்து, உஷா பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் ஜெயசந்திரன் வரவேற்றார்.
தென்காசி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார், மாவட்ட பொருளாளரும் ஒன்றிய கவுன்சிலருமான முரளி ராஜா ஆகியோர் அலங்கரிப்பட்ட நேருவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் செல்வன், சோனியா பேரவை பிரபாகரன், வர்த்தக அணி அரவிந்த், சமுத்திரம், வக்கீல் ரமேஷ், கந்தையா, சாலமோன், டென்சிங், லூர்து கோபி, ஆனந்த், கோபால், ஆட்டோ செல்வராஜ், டேவிட், ஜெகன், பிரபாகர், அரவிந்த், தபேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல்சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப் பள்ளி மற்றும் ஜெமிமா ஆங்கிலப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது..விழாவிற்கு பள்ளி நிர்வாகி ஜேபஸ் பொன்னையா தலைமை வகித்தார் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி செல்வராணி ஜெபஸ் முன்னிலை வகித்தார். ஜெமிமா ஆங்கிலப் பள்ளி தலைமையாசிரியர் தங்கமாரி வரவேற்றார்
பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளை ஜவஹர்லால் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மெடி மோனிகா துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இந்த விழாவில் தென்காசி நகராட்சி துணை சேர்மன் சங்கராதேவி வாழ்த்தி பேசினார். முருகேசன், பிரபாகரன், தெய்வேந்திரன், மற்றும் ஆசிரியைகள், பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் அருள் சுதா நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2