Begin typing your search above and press return to search.
அச்சன்கோவில் அருகே உள்ள கும்பவுருட்டி நீர்வீழ்ச்சி திறப்பு
தமிழக - கேரளா எல்லைப் பகுதி அச்சன்கோவில் அருகே உள்ள கும்பவுருட்டி நீர்வீழ்ச்சி, சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வழியாக கேரளா மாநிலம் செல்லும் அச்சன்கோயில் அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் கும்பவுருட்டி அருவி அமைந்துள்ளது. கும்பவுருட்டி அருவியில் சில தினங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்த அருவிக்கு செல்வதற்கும், குளிப்பதற்கும் கேரளா வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், மீண்டும் மூன்று மாதங்களுக்குப் பிறகு, இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், அருவியில் குளிப்பதற்கும் கேரள அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழக, கேரளா மாநில சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.