/* */

ஒண்டி வீரன் நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை

ஒண்டி வீரன் 250 வது நினைவு தினத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

HIGHLIGHTS

ஒண்டி வீரன் நினைவு  தினம்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ். 

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு ஆண்டும் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் ஆகஸ்ட் 20 ம் தேதி அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை ஒட்டி தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் உள்ள நினைவிடத்திறகு, தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் வெளிமாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்