/* */

தென்காசியில் உரிய அனுமதி இன்றி செயல்பட்ட ஆம்னி பேருந்து சிறைபிடிப்பு

தென்காசியில் அனுமதிக்கு புறம்பாக இயங்கிய ஆம்னி பஸ்கள் அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்டன.

HIGHLIGHTS

தென்காசியில் உரிய அனுமதி இன்றி செயல்பட்ட ஆம்னி பேருந்து சிறைபிடிப்பு
X

சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள்.

தென்காசி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருவதாக போக்குவரத்து வட்டாரத்துறை அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசியில் அனுமதிக்கு புறம்பாக இயங்கிய ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டது.

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் , மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி, சங்கரன்கோவில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் ஆகியோர் இணைந்து தென்காசி பகுதியில் சிறப்பு கூட்டு வாகன தணிக்கையின் போது இரண்டு ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதிக்கு புறம்பாக இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு ஆம்னி பஸ் இரண்டையும் சிறைபிடிக்கபட்டு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

மேலும் இது போன்று சிறப்பு கூட்டு வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவத்து அலுவலர் கண்ணன் கூறினார்.

Updated On: 17 Oct 2023 5:23 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...