தென்காசியில் உரிய அனுமதி இன்றி செயல்பட்ட ஆம்னி பேருந்து சிறைபிடிப்பு
தென்காசியில் அனுமதிக்கு புறம்பாக இயங்கிய ஆம்னி பஸ்கள் அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்டன.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருவதாக போக்குவரத்து வட்டாரத்துறை அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசியில் அனுமதிக்கு புறம்பாக இயங்கிய ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டது.
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் , மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி, சங்கரன்கோவில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் ஆகியோர் இணைந்து தென்காசி பகுதியில் சிறப்பு கூட்டு வாகன தணிக்கையின் போது இரண்டு ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதிக்கு புறம்பாக இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு ஆம்னி பஸ் இரண்டையும் சிறைபிடிக்கபட்டு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
மேலும் இது போன்று சிறப்பு கூட்டு வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவத்து அலுவலர் கண்ணன் கூறினார்.