தென்காசி மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம்
Handicapped People - தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
Handicapped People -தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக் கடன் மானியம் மற்றும் வங்கி கடன் மேளா, தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி கழகத்தின் கீழ் வீடு கட்ட கடன் போன்ற பல்வேறு நல திட்ட உதவிகளுக்காக மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாட்கோ வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏராளமான மாற்று திறனாளிகள் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல்கள் தெரிவிப்பார்கள் என மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2