தென்காசி ஹமிதியா பள்ளியில் நூலக தொடக்க விழா
வ.உ.சி வட்டார நூலகம் நடத்திய தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் பள்ளி நூலக தொடக்க விழா தென்காசி ஹமிதியா பள்ளியில் நடைபெற்றது.
HIGHLIGHTS
பள்ளிக்கல்வித்துறை, வ.உ.சி வட்டார நூலகம் நடத்திய தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் பள்ளி நூலக தொடக்க விழா 8.12.2021 புதன்கிழமை தென்காசி ஹமிதியா நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
வட்டாரக்கல்வி அலுவலர் இரா.மாரியப்பன் அவர்கள் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்புரை ஆற்றினார். கிளைநூலகர் சுந்தர் சிறப்புரை ஆற்றினார். மாணவ மாணவியர்கள் வாசிப்பதின் அவசியம் குறித்து வட்டாரக்கல்வி அலுவலர் எடுத்து கூறினார்.
கிளை நூலகர் சுந்தர் நூலகம் பள்ளிகளில் அமைப்பதின் அவசியம் பற்றி கூறினார்கள். பள்ளியில் இன்று நூலக பயன்பாட்டை வட்டாரக்கல்வி அலுவலர் தொடங்கி வைத்து, ஆசிரியர்கள் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளர்க்க ஆவண செய்யக் கூறினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கு காந்திய அமுதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள்; ஜன்னத்துல்பிர்தௌஸ், ஷீரின்சிதாராபானு, மெஹ்ராஜ், ஜோஸ்பின்மேரி சிறப்பாக செய்திருந்தனர்.