குற்றாலம் மகளிர் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ரேகிங் கொடுமைகள் நடைபெறாமல் இருக்க 1997 சட்டம், தடுப்பு நடவடிக்கைகள், தண்டனை விவரங்கள் குறித்து சிறப்பு அழைப்பாளர் பேசினார்.
HIGHLIGHTS
தென்காசி சட்டப்பணிகள் குழு சார்பாக குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து கேலி வதைத் தடுப்புச் சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கேலி வதை தடுப்புச் சட்டம் குறித்தும், கல்லூரிகளில் மாணவ-மாணவியர் இடையே நடைபெறும் ரேகிங் கொடுமைகள் நடைபெறாமல் இருக்க 1997 சட்டம் அதன் தடுப்பு நடவடிக்கைகள் தண்டனை விவரங்கள் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கி சிறப்பு அழைப்பாளர் தென்காசி சட்ட பணிகள் குழு தலைவர் கூடுதல் சார்பு நீதிபதி நீதியரசர் ருஷ்டின் ராஜ் பேசினார். தலைமை வகித்து பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் பேசினார். மேலும் கல்லூரி ஆன்ட்டி ராகிங் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மற்றும் முக்கிய கல்லூரி பேராசிரியர்கள், மூத்த வழக்கறிஞர் குலசேகரன், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் குற்றாலம் காவல்துறை உதவி ஆய்வாளர் கோமதி நாதன் ஆகியோரும் முகாமில் கலந்து கொண்டு பேசினார். சட்டப்பணிகள் குழு ஒருங்கிணைப்பாளர் இராமசுப்ரமணியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் நீதிமன்ற பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.