Begin typing your search above and press return to search.
தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, தென்காசி எஸ்.பி அலுவலகத்தில், அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இத தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுரையின் பேரில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோருக்கும், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.உஷா ஏற்பாட்டின்படி, இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் (சி) மரு.தேவி மூலம், அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
அத்துடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.