Begin typing your search above and press return to search.
கீழப்பாவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விடுமுறை
கீழப்பாவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாவூர் கிராம ஊராட்சி வார்டு எண்-1 உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் 9ம் தேதி மேலப்பாவூர் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அந்நாளில் மேற்கூறிய கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.