/* */

குறைந்த விலையில் மொபைல் தருவதாக மோசடி: பணத்தை மீட்டு ஒப்படைத்த போலீசார்

குறைந்த விலையில் மொபைல் தருவதாக மோசடியில் சிக்கியவருக்கு பணத்தை மீட்டு போலீசார் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

குறைந்த விலையில் மொபைல் தருவதாக மோசடி: பணத்தை மீட்டு ஒப்படைத்த போலீசார்
X

மோசடி பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டம், கலப்பகுளம் பகுதியை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர் இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் மொபைல் போன் விற்கப்படுவதாக வந்த விளம்பரத்தை நம்பி ரூ.12,800 பணத்தை விளம்பரத்தில் வந்த வங்கி கணக்கிற்கு Phone Pe மூலமாக அனுப்பியுள்ளார்.

ஆனால் மொபைல் போன் வராமல் ஏமாந்து விட்டதாகவும், தனது பணத்தை மீட்டுத் தருமாறு தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அன்புச்செல்வன் புகாரளித்தார். புகாரின்பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின் படி காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி விசாரணை மேற்கொண்டு அந்த பணத்தை மீட்டார்.

மீட்கப்பட்ட ரூ.12,800 பணத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் முன்னிலையில் தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 14 April 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  2. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  3. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  4. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  5. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  6. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  8. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  10. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு