/* */

பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தென்காசியில் பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதன் கிணறு, மகேந்திரவாடி, சாயமலை, களப்பாளங்குளம், கரிசல்குளம், பழங்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் 2018, - 19-ல் வறட்சி காரணமாக பயிர்கள் பாதிப்படைந்தது. இதனை அரசு ஆய்வு செய்து நிவாரணம் வழங்கியது. அதனை தொடர்ந்து 2020-ல் ஏற்ப்பட்ட மழையால் அதே போல் பயிர்கள் பாதிப்படைந்தது.

ஆனால் 3 ஆண்டுகளாக பயிர் காப்பிடு திட்டத்தில் மூலம் நிவாரணம் வழங்கபடவில்லை. எனவே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 11 April 2022 1:51 PM GMT

Related News