/* */

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கு: இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

முன்விரோதம் காரணமாக முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை.

HIGHLIGHTS

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கு: இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை
X

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பண்டாரம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கலங்கரை பகுதியை சேர்ந்தவர் விஜி மோகன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 11.05.2015 அன்று பரமசிவனின் மகன் பண்டாரம் என்பவர் விஜி மோகனை கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விஜி மோகனின் மனைவி ஷிபா, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது சம்பந்தமான வழக்கு தென்காசி கூடுதல் அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இளம் குற்றவாளியான பண்டாரத்திற்கு (27) நீதிபதி அனுராதா ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும் அவதூறாக பேசியதாக உள்ள வழக்கில் 2,000 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளியை காவல்துறையினர் சிறைச்சாலையில் அடைத்தனர்.

Updated On: 2 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?