/* */

குற்றால அருவிகளில் நீராட விதித்த தடையை நீக்க வேண்டும், ஜெயக்குமார் எம்பி

குற்றால அருவிகளில் நீராட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயல் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் நீராட விதித்த தடையை நீக்க வேண்டும், ஜெயக்குமார் எம்பி
X

குற்றாலத்தில் பேட்டி அளித்த எம்பி ஜெயக்குமார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயல் தலைவரும், திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலாத்தலங்கள் திறந்துவிடப்பட்டுள்ளது. திரையரஙகுகளும் திறக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் குற்றால அருவியில் மக்கள் நீராட இன்னும் அரசு அனுமதிக்கவில்லை . அருவியல் நீராட மக்களை அனுமதிப்பது எந்த சிக்கலும் இருக்காது என்று நான் நம்புகிறேன்.

இது இப்பகுதியில் உள்ள ஏராளமான வர்த்தகர்களின் வாழ்வாதார பிரச்சனையும் கூட எனவே தமிழக முதல்வர் இது குறித்து பரிசீலித்து பொதுமக்கள் அருவியில் நீராட அனுமதி அளிக்க வேண்டும்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, வேளாண் திட்டங்களை இப்போது எதிர்க்கும் திமுக இன்னும் மூன்று நான்கு மாதங்களில் ஆதரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

நிச்சயம் மூன்று மாதத்தில் இந்த சட்டத்தில் மக்கள் எதிர்பார்க்கும் திருத்தம் கொண்டு வரும் நிலை உருவாகும், அதற்கு தமிழக முதல்வரே காரணகர்த்தாவாக இருப்பார் எனவே அது நிச்சயம் திமுக ஆதரிக்கும் என்றார்.

Updated On: 3 Sep 2021 3:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?