/* */

செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

தென்காசியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
X

தென்காசி செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தென்காசி மாவட்ட கிளை, இராஜா சித்தா மருந்தகம் மதுரை மற்றும் சங்கரன்கோவில் சர்வோதயா குற்றாலம் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோட்டாட்சியர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். இராஜா சித்தா மருத்துவமனை மருத்துவர் இராஜமுருகன், சங்கரன்கோவில் சர்வோதயா சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைவர் பாலகிருஷ்ணன், சர்வோதயா குற்றாலம் கிளை மேலாளர் சிவ வடிவேல் மற்றும் கிளை மேலாளர்கள் ராஜேஸ்கண்ணா, குமார், கல்யாணி சுந்தர், வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்,

இந்நிகழ்ச்சியில் வேட்பாளர்களுக்கும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கினார்கள். அதன்தொடர்சியாக புதிய பேருந்து நிலையத்தில் எதிரேயுள்ள நீதிமன்றம் மற்றும் அரசு மருத்துவமனை போன்ற இடங்களிலும் வழங்கினார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்டகிளை செயலாளர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.

Updated On: 28 April 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு