Begin typing your search above and press return to search.
பெட்ரோல் விலை உயர்வு: சுரண்டையில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து, சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
இந்தியா முழுவதும் டீசல் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு, சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும், மண் பானையில் சமையல் செய்யும் நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், நகர தலைவர் ஜெயபால் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.