/* */

குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

குற்றாலம் திருக்குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
X

குற்றாலம் திருக்குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குற்றாலம் திருக்குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாக விளங்கும் தென்காசி மாவட்டம் குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது நாள்தோறும் காலை மாலை சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவில் ஐந்தாம் திருநாள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 7-ஆம் திருநாள் காலை மாலை இருவேளைகளிலும் நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 8-ஆம் திருநாள் சித்திர சபையில் நடராச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான பத்தாம் திருநாள் காலை சித்திரை விஷு தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Updated On: 5 April 2022 6:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’