/* */

சுரண்டை அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் : சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல்..!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

HIGHLIGHTS

சுரண்டை அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்  : சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல்..!
X

புதிய வகுப்பறைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்.

சுரண்டை அருகே அரசு பள்ளிக்கு ரூ.2.33 கோடி நிதியில் 11 வகுப்பறைக் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. அந்த அடிக்கல் நாட்டுவிழாவில் எம்எல்ஏ பழனி நாடார் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரத்தில் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கோரிக்கை வைத்து இருந்தார்.

அதன்படி சிவகுருநாதபுரம் காமராஜர் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு 11 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்காக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடி 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. பூமி பூஜையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பங்கேற்று பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், தலைமை ஆசிரியர் கனகராஜ் ஒப்பந்ததாரர் கரையானூர் மாடசாமி, முருகன், உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Oct 2023 5:31 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி