சாலைகளை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் மனு
சாலைகளை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கோரிக்கை மனு அளித்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், கருவந்தா மற்றும் அச்சங்குட்டம் ஊராட்சியில் பழுதான தார் சாலையை புதுப்பிக்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனிடம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கோரிக்கை மனுவினை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது தென்காசி தொகுதியில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவந்தா கிராமத்தில் இருந்து ரதமுடையார்குளம் வரை செல்லும் தார் சாலை அச்சங்குட்டம் ஊராட்சியில் மாடர்ன் கோவில் முதல் வீ கே புதூர் செல்லும் சாலை மற்றும் யோவான் நாடார் கோவில் தெரு முதல் குறிச்சான் பட்டி செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளது.
இதனால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆதலால் தாங்கள் போர்க்கால அடிப்படையில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவந்தா மற்றும் அச்சங்குட்டம் ஊராட்சியில் மேற்கண்ட பழுதான தார் சாலையை புதுப்பிக்க 25 சதவீதம் கனிமம் மற்றும் சுரங்க துறை நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம். கணேசன், காஜாமைதீன், தென்காசிமாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், நகர துணை தலைவர் தேவராஜன், பொருளாளர் ஈஸ்வரன், சுரண்டை பிரபாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.