தென்காசி: காவலர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தென்காசியில், காவலர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி, தமிழகமெங்கும் 45 கிளைகளுடன் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி, 13 ஆண்டுகளில் 12,281 மாணவர்களை அரசு பணியில் அமர வைத்துள்ளது.
ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐ ஏ எஸ் அகாடமி கல்வி நிலையத்தில் பயின்று, 2021 தமிழக அரசால் நடத்தப்பட்ட காவலர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, தென்காசி சிவா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் மூத்த ஆசிரியர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினர். தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் விழாவிற்கு தலைமை தாங்கி, காவலர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் ஆகாச மூர்த்தி, தென்காசி காவல் உதவி ஆய்வாளர்கள் முத்துபாண்டி, கற்பகராஜ், ஆய்குடி ஜேபி கல்லூரி முதல்வர் சுரேஷ் ஜான் கென்னடி, செங்கோட்டை அரசு நல்நூலகர் ராமசாமி, ஆகாஷ் ப்ரண்டஸ் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து நினைவுப் பரிசுகளை வாங்கி சென்றனர். ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.