தென்காசியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழக அரசு மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலையை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.