Begin typing your search above and press return to search.
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு -ஆட்சியரிடம் மனு
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது. என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பண்பொழி கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.