/* */

சங்கரன்கோவிலில் ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்: பாஜக வேட்பாளர் குற்றசாட்டு

சங்கரன்கோவிலில் பணபட்டுவாடாவை தடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாஜக வேட்பாளர் குற்றசாட்டு.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்: பாஜக வேட்பாளர் குற்றசாட்டு
X

சங்கரன்கோவிலில் பணபட்டுவாடாவை தடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாஜக வேட்பாளர் குற்றசாட்டு. ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த கோரிக்கை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட முப்பது வார்டு பகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி அதில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, மதிமுக போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ1500வரை பணம் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக தேர்தல் பறக்கும்படையினர், சங்கரன்கோவில் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அதனால் நேர்மையான முறையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் ஜனநாயகம் பணத்தால் விற்பனையாகி வருகிறது. எனவே தமிழக தேர்தல் ஆணையம் உடனடியாக சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மூன்றாவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் விக்னேஷ் கோரிக்கையாகும்.

Updated On: 18 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்