உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி தூய ஆவி திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி சங்கரன்கோவில் அருகே உள்ள தூய ஆவி திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
HIGHLIGHTS
சங்கரன்கோவில் அருகே உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி தூய ஆவி திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் தூய ஆவி திருத்தலத்தில் உக்ரேனில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் போரினால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பதுங்கு குழியில் தங்கி வரும் சூழலினால் அவர்களின் அடிப்படை தேவைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டு தவித்து வருகின்றனர்.
மேலும் இந்தப் போரானது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே உக்ரைனில் அமைதி நிலவ வேண்டியும் ரஷ்யா போரை உடனடியாக நிறுத்தி அகிம்சை முறையில் செயல்பட வேண்டும் என பாஸ்டர் ஜேசு மைக்கேல் ராஜ், அருள் ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறித்தவ மக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.