/* */

சங்கரன்கோவிலில் தவறிய குழந்தை புளிங்குடி பேருந்து நிலையத்தில் மீட்பு

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தவறிய குழந்தையை புளிங்குடி பேருந்து நிலையத்தில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் தவறிய குழந்தை புளிங்குடி பேருந்து நிலையத்தில் மீட்பு
X

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தவறிய குழந்தையை புளிங்குடி பேருந்து நிலையத்தில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தவறிய குழந்தையை புளிங்குடி பேருந்து நிலையத்தில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த காவல்துறையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

திருச்சியை சேர்ந்த பாத்திமா என்பவர் அவரது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் வீரணம் கிராமத்திற்கு துக்க நிகழ்விற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தனர். அதனை முடித்து விட்டு நேற்று மறுபடியும் திருச்சி செல்வதற்கு வீரணம் கிராமத்தில் இருந்து குடும்பத்துடன் சங்கரன்கோவில் வந்தனர்.

அப்போது பாத்திமாவின் ஐந்து வயது குழந்து பேருந்து நிலையத்தில் தென்காசி செல்லக்கூடிய பேருந்தில் ஏறியது. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துடன் குழந்தை யார் என்று தெரியாததால் புளியங்குடியில் உள்ள பேருந்து நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக புளியங்குடி காவல்துறையினர் சங்கரன்கோவில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து பாத்திமா குழந்தையை காணவில்லை என நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உங்களுடைய ஐந்து வயது குழந்தை பானு புளியங்குடி காவல்நிலையத்தில் பத்திரமாக உள்ளது என கூறினார்கள். விரைந்து சென்ற குடும்பத்தினர் குழந்தையை மகிழ்ச்சியுடன் பெற்று காவல்துறையினர் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு நன்றி தெரிவித்தனர்.

Updated On: 14 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்