/* */

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்: 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்: 3  மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத்துறையினர் மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54). இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியவரை காணவில்லை என உறவினர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய நபரை மீட்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றிய பின்னர் சடலமாக மீட்டு கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Nov 2021 2:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...