Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவிலில் மத்திய அரசை கண்டித்து கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் போன்ற கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.