/* */

தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்

தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்
X

வல்லம் அன்னை தெரசா ஆர்சி மேல்நிலைப்பள்ளியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

தமிழக பொது சுகாதாரத் துறையின் சார்பில், மத்திய அரசு இணைந்து நடத்தும் சுகாதார திருவிழா, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் தென்காசி வட்டாரம், வல்லம் அன்னை தெரசா ஆர்சி மேல்நிலைப்பள்ளியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கண் மருத்துவம், காது-மூக்கு தொண்டை, பல், குழந்தைகள் மருத்துவம், சித்த மருத்துவ சிகிச்சைகள் கண்காட்சிகள் மூலம் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை, இ- சஞ்சீவினி எனப்படுகிற தொலைபேசி வாயிலாக பொது பரிசோதனை ஆலோசனை போன்ற சேவைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட, ஒன்றிய, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு.அனிதா, மரு.R.உமாதேவி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.வெள்ளைச்சாமி, துணை இயக்குநர் காசநோய், மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் உட்பட அரசு அலுவலர்கள் சுகாதாரத்துறையினர், மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2022 2:41 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு