Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அச்சம் பட்டியில் ஒருவர் வெட்டிக்கொலை
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள அச்சம் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 33) கூலித்தொழிலாளி. இவரை கடந்த 23ஆம் தேதி தெற்கு கிடாரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் அரிவாளால் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார். இதையடுத்து கோபால் மீதான கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.